Monday, April 28, 2025

கனவுகளை சுமந்த பல்கலைக்கழக வாழ்க்கை

கிழக்கு இலங்கையில் கொட்டியாரப்பற்றில் ஒரு அழகிய கிராமம். கடல்கள் சூழ வீதி ஓரங்களில் வருபவர்களை வரவேற்க கைவிரித்து நிற்கும் மரங்கள், வயல்வெளிகள், கடல் நீரில் பட்டு வரும் இதமான காற்று, தென்னை மர தோப்புக்கள்.  இயற்கை வளம் நிறைந்த தோப்பூர் என்ற ஒரு கிராமம் குட்டி கேரளா என்று கூட சொல்லலாம். 

கடலினை நோக்கி பார்த்தவனாக அமர்ந்திருக்கிறான் அப்துல்லா. ஒரு இறையச்சம் உடைய வாலிபன். இக்கதையின் கதாநாயகன். ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து கிராமத்திலேயே படிக்கின்ற மாணவன். அவனுக்கென்று பல கனவுகளை சுமந்து கொண்டு படிக்கிறான். உயர்தர பரிட்சையில் 3A சித்தியினை   மாவட்டத்தில் 3 இடத்தையும் பெறுகிறான். தான் கனவு காணும் கொழும்பு பல்கலைக்கழகத்தையும் கொழும்பு என்கின்ற அந்த நகர வாழ்க்கையும் பார்க்க வேண்டும் என்ற அவனின் அந்த பல நாள் கனவு நிஜமாகி அந்த தருணம் சொல்வது அறியாத திகைக்கிறான; அப்துல்லா.

 பல்வேறுபட்ட குடும்ப சுமைகள் அப்துல்லாவுக்கு வாப்பாவோ பக்கவாதத்தினால் வீட்டிலே இருக்கின்றவர் .அப்துல்லாவின் உம்மாதான் வீட்டில் செய்கின்ற சிறிய உணவுகளை விற்று வரும் காசிதான் அவர்களின் குடும்பச் சுமையின் பக்க பலமாக இருந்தது. இதற்கு நடுவில் தந்தையின் மருத்துவ செலவுகள் தங்கச்சியின் படிப்புச் செலவு என பல சுமைகள் குடும்பத்தின் மூத்த மகன் என்ற வகையில் அப்துல்லாஹ் விடுமுறை தினங்களில் வேலைக்கு செல்வதும் வழக்கம்.

சிறிது காலம் செல்கின்றது. அவனுக்கு பல்கலைக்கழகத்திற்கான அழைப்பு கடிதம் அது. தான் கனவு காணும் இடத்தினை பார்க்க போகிறோம் என்ற எண்ணத்துடன் மகிழ்ச்சியில் இருக்கிறான். இன்னும் ஒரு பக்கம் கவலையில் இருக்கும் அவன் மனநிலை வீட்டிலேயே முதுமையின் பிடியிலும் நோய்வாய்ப்பற்றிருக்கும் வாப்பா, உம்மா படித்துக் கொண்டிருக்கும் தங்கச்சி தன்  குடும்பத்தை விட்டு எப்படி பிரிந்து செல்வது என்ற  எண்ணம் அவனுக்கு இதுவரைக்கும் குடும்பத்தையும்; விட்டு செல்லாத அப்துல்லாவுக்கு 325 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் கொழும்பு என்கின்ற நகரம் அவன் கண்களில் பலவிதமாக வந்து செல்கின்றது.

பல கனவுகளுடன் தனது பைகளுடனும் தனது உம்மா வருன்கின்ற வருமானத்தில் சேர்த்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்துடன் கொழும்புக்குப் போக வேண்டும் என்று சொல்கிறான் அப்துல்லா. முதல் தடவையாக தனிமையே உணர்கிறான். பஸ்ஸின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தவனாக தன் குடும்பத்தின் வறுமையின் நிலை எண்ணுகிறான் அவனின் கண்கள் அவனை அறியாமலே கலங்குகின்றன. மறுக்கணம் தான் படித்து எப்படியாவது தனது குடும்பத்தினை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அவனின் மனநிலை அவனை அவனே உறுதிப்படுத்திக் கொள்கிறான்.

அவனை அறியாமலே அப்துல்லா தூங்கி விடுகின்றான். திடீரென அவன் காதில் கொட்டுவ கொட்டுவ என்ற சத்தம் அவன் காதில் விழுகின்றது. முழித்துப் பார்க்கிறான் அதுதான் அவன் பார்க்க ஆசைப்பட்ட கொழும்பு நகரம்  பரபரப்பாகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு மத்தியில் அப்துல்லாஹ் நிற்கிறான். விண்ணை தொடுகின்ற கட்டிடங்கள் அவனை பிரமிக்க வைக்கின்றன பல கனவுகளை தாங்கிய அவன் பைகளை எடுத்துக்கொண்டு அந்த பல்கலைக்கழக விடுதி என்ற மற்றுமொரு வாழ்க்கையை நோக்கி நகர்கிறான் அப்துல்லா. அதுதான் தனது நான்கு வருடத்திற்கான புதிய வீடு என்பதை உணர்கிறான்.

பல்கலைக்கழக விடுதியில் புதிய நண்பர்கள் பல கிடைக்கப்பெறுகின்றனர். அவர்களோ புதிய முகங்கள், இடங்களோ புதிய இடங்கள் சிலர் சிங்களத்திலும் கதைக்கின்றனர். அப்துல்லாவுக்கோ சிங்களம் தெரியாது. அவர்களிடம் கதைத்துக்  கொண்டிருக்கும் போது அப்துல்லாவின் தொலைபேசியில் உம்மாவின் அழைப்பிதழ் அது உம்மாவின் குரல் கேட்கிறது. சலாம் கூறி ‘மகன் போய் சேர்ந்துட்டீங்களா’ என்ற சத்தம் சலாத்திற்கு பதில் கூறிய அப்துல்லா அல்லாஹ்வின;துணை வந்துட்டன;  உம்மா இப்ப வாப்பாட சுகம் எப்படி இருக்கு தங்கச்சி எங்க என்று விசாரிக்கிறான் கொஞ்ச நேரம் கதைச்சிட்டு தூங்க சென்று விட்டான்.

 அடுத்த நாள் அவனுடைய கனவு இடத்தினை நோக்கி நகர்கிறது. அவனின் பயணம் அதுதான் கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் முதலாம் இடத்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகம். அவனோடு தொலைபேசியில் கதைத்து நண்பன் ஆகிய உமைர் இணைகிறான். இருவரும் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

அப்துல்லா பல்கலைக்கழகம் வருவதும் பின்னர் விடுதி செல்வதுமாக அவன் வாழ்க்கை நகர்ந்து கொண்டு செல்கிறது ஒரு இடத்தில் அவனுக்கு நகர வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. சுவை இல்லாத உணவுகள்;; பல சுமைகள் தோல்விகள் என தனி ஒருவனாக அவற்றை சந்திக்கின்றான்;. அந்தப் பல்கலைக்கழக வாழ்க்கை அவனுக்கு கற்றுக் கொடுத்தது பல. ஒரு கட்டத்தில் தன் உம்மா சமைத்து தந்த அந்த உணவுகளையும் தன் பள்ளி நண்பர்களையும் அவர்களின் நினைவுகளையும் எண்ணி பார்க்கின்றான் அப்துல்லா.ஆனால் அவன் குறிக்கோள் ஒன்று மட்டும்தான் தன் குடும்பத்தின் வறுமை எப்படியாவது இல்லாமல் செய்ய வேண்டும் என்பது. இவ்வாறுதான் அப்துல்லாவின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது அந்த நகரத்தில் 

அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் அப்துல்லாவின் வாழ்க்கை………………

தொடரும் ……. கனவுகளை சுமந்த பல்கலைக்கழக வாழ்க்கை ….


Written By

JHANKEER MOHAMED JAFEER
Faculty of Arts (R), 1st Year
University of Colombo

Friday, April 18, 2025

Women in Islam: A Comprehensive Examination of Rights, Empowerment, and Misconceptions

Abstract 
The rights and status of women in Islam have often been misunderstood and misrepresented. While many societies viewed women as inferior or as property, Islam introduced revolutionary principles affirming women’s equality, dignity, and autonomy. This article explores women’s rights in Islam, covering marriage, divorce, education, economic rights, and political participation. It also addresses misconceptions and challenges faced by women in Muslim-majority societies, comparing Islamic teachings with cultural practices. 

Introduction 
Historically, women were often regarded as property with few rights. However, Islam brought groundbreaking changes, providing women opportunities for education, work, and legal recognition. The Quran and Hadith affirm that men and women are equal before God, both bearing individual spiritual responsibilities. Despite these teachings, societal norms in Muslim-majority countries sometimes diverge from Islamic principles, leading to misconceptions about women’s rights in Islam. 

Islamic Teachings on Women's Equality
Islamic law, based on the Quran and Hadith, recognizes women as equal spiritual partners. The Quran states, "And among His signs is this: that He created mates for you from yourselves that you may find rest and peace of mind in them" [Quran 30:21]. The Prophet Muhammad (pbuh) emphasized respect and kindness toward women, stating, "The most perfect in faith among believers is he who is best in manners and kindest to his wife" [Abu Dawud]. 

Women's Rights in Islam
Legal and Economic Dimensions Women in Islam have the right to own property, manage finances, and inherit, as the Quran says: "Whatever men earn, they have a share of that and whatever women earn, they have a share in that" [Quran 4:32]. Men are required to provide financial support to their wives, ensuring women’s financial independence. Women also retain their property and dowry, even within marriage, which reflects their autonomy. 

Marriage and Divorce
Rights and Autonomy In Islam, marriage is a contract based on mutual consent. Women have the right to choose their spouses, and their consent is required for marriage. If the marriage ends in divorce, women can initiate divorce (khula) and retain their dowry and property. Divorce laws ensure that women are not trapped in unsatisfactory marriages, reflecting their autonomy and rights in marital relationships. 

Education and Political Participation 
Islam strongly encourages education for both genders. The Prophet Muhammad (pbuh) said, "Seeking knowledge is mandatory for every believer" [Ibn Majah]. Women have historically contributed to medicine, literature, and other fields. Islam also grants women the right to participate in public life, including politics, with female rulers historically present in countries like Pakistan and Bangladesh. The Quran states, "The believers, men and women, are helpers of one another" [Quran 9:71]. 

Misconceptions and Cultural Practices 
Misconceptions about women’s rights in Islam often stem from cultural practices rather than religious doctrine. For instance, the Islamic dress code promotes modesty, not oppression. The guidelines are intended to ensure respect for women based on their intellect and character, rather than their physical appearance. Cultural misinterpretations sometimes limit women’s freedoms, but these are not reflective of the Quranic vision for gender equality. 

The Ideal vs. Reality
Challenges in Modern Muslim Societies While Islamic teachings provide a strong foundation for women’s rights, challenges persist in many Muslim-majority countries, where patriarchal norms and political instability hinder women’s full participation in society. Scholars and activists continue to work toward reconciling the ideal of gender equality in Islam with the lived realities of women in these regions. 

Conclusion
Islamic teachings emphasize women’s equality and dignity, with rights in spiritual, legal, and economic domains. However, cultural practices and misinterpretations have sometimes undermined these principles. By returning to the core teachings of Islam, Muslim societies can better achieve the gender equality envisioned in the Quran. 

Written By

Nazhath Aara Nawaz
Faculty of Arts (R), 3rd Year
University of Colombo




Wednesday, April 16, 2025

நடந்தவைக்கு நன்றிகள்!!!!!

வாழ்க்கை ஒரு மனிதனுக்கு முடிவில் பல அனுபவங்களை கொடுத்து விடுகின்றது. இவை ஆயுள் நீளமாக உள்ளவருக்கு மட்டுமல்ல கொஞ்சநாள் எனினும் சரியாக பயன்படுத்துபவருக்கே கிடைக்கின்றன. அனுபவம் என்பது தேடிப் பெற வேண்டியவை என பலர் கருதுகின்றனர் ஆனால் சில நேரங்களில் அது தேடாத சிலருக்கும் சிறப்பாக அமைந்து விடுகின்றது. அவளும் பத்துடன் பதினொன்றாக பிறந்து வளர்ந்தவள் தான்! இறைவனை மட்டுமே நம்பி வாழும் ஒருவள்.

13 வருட கல்வியின் பின்னர் கிடைக்கும் நான்கு வருட வாழ்க்கை என்ன பெரிதாக செய்து விடப் போகிறது என்ற எண்ணத்திலேயே அடுத்த அடியையும் பல்கலைக்கழகத்திற்கு எடுத்து வைத்தவள்.

வாழ்க்கையில் அழகான சந்தர்ப்பங்களை சில கசப்பான அலுபவங்கள் தான் உருவாக்கி அதுபோலத்தான் அவளுக்கும்..எதையும் விடுகின்றன. தனியாகவும் துணிவாகவும் கையாள வாழ்க்கை அவளுக்கு கொடுத்த ஒரு நல்ல ஆயுதம் "அனுபவம்"

அன்று பல்கலைக்கழக வாசலில் பெற்றோர் கையில் இருந்து தன் கையை எடுத்த பிறகு திக்கத்தடுமாறிய அவள் துணிவு

எங்கே செல்வது தெரியாது அசைய மறுத்த கால்கள், தெரியாத மொழியை பேசத் தடுமாறிய வாய், தெரிந்த போதும் வெளியே வராத தாய்மொழி, வாய்ப்புக்கள் குவிந்த போதும் முறை தவறி செய்து விடுவோமோ என்று செய்யத்தவறிய சரிகள், அன்னியமாய் தெரிந்த அடுத்தவர் புன்னகை, தனியாய் நின்று போராட தடுத்த சொந்த மனம் என பல குறைகள் தன்னை எச்சரிக்க கண்டாள்....!

எத்தனையோ வைத்துக் கொண்டு அடுத்த கட்டம் செல்ல அவளுக்கு கை கொடுத்தது என்னவோ அனுபவம் தான்?

காலச்சக்கரம் வருடங்களை சுழற்றவே தடுமாற்றங்கள் தடம் மாறின! அந்நியமாய் தெரிந்த அடுத்தவர்கள் நண்பர்களாய் உருவெடுத்தனர்! தெரியாத நகரம் வழமையான வதிவிடம் ஆகியது! தவறுகள் சரி செய்யப்படுகின்றன.

எதிர்த்து நிற்க தயங்குகின்ற பயத்துக்கும் தடுமாற்றத்துக்கும் மத்தியில் போராடிய அவளுடைய சிறிய இதயம் எனதே!!!

இத்தனை திருத்தத்துக்கும் காரணமானது சூழ்நிலையோ காலமாகவோ இருக்கலாம்.. ஆனால் நான் நன்றி சொல்ல விரும்புவது என்னவோ அல்லாஹ்விற்கும் என்னை கடந்து சென்ற சில கசப்பான அனுபவங்களுக்குமே!! அல்லும்துலில்லாஹ்!!!!!!!

Written By

M I F IMASHA
Faculty of Arts (R), 3rd Year
University of Colombo


Monday, April 14, 2025

அல்குர்ஆன் பேசும் அன்பு

அல்குர்ஆன் நமக்குச் சொல்வது போல், அன்பு என்பது இறைவன் படைத்த அனைத்தையும் உள்ளடக்கிய ஓர் அற்புதக் குணம் நம்மைச் சுற்றி நாம் காணும் அழகு, இறைவனின் அற்புதமான கலைத்திறனை நமக்குக் காட்டுகிறது. அது நம்மை பிரமிப்பால் நிரப்புகிறது மற்றும் அவனது முடிவற்ற அன்பையும் கருணையையும் நமக்கு நினைவூட்டுகிறது உலகில் உள்ள அழகை நாம் பாராட்டும்போது, அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் அருட்கொடையை உணர்கிறோம்

இறைவன் மீதான அன்பு:

மேலும் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள் (அல்குர்ஆன் 2:165)

முஹம்மதுவே, 'நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால், என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை மன்னிப்பான் என்று கூறுங்கள். (அல்குர்ஆன் 3:31)

சுய அன்பு மற்றும் சுய இரக்கம்:

குர்ஆன், சுய அன்பு மற்றும் சுய இரக்கத்தின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்கிறது. தன்னை கருணை மற்றும் புரிதலுடன் நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது இந்த சுய-கவனிப்பு ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பேணுவதற்கும் ஒருவரின் ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

குடும்ப அன்பு:

குடும்ப அலகிற்குள், அன்பை வளர்ப்பது குறித்து நுண்ணறிவு சார் வழிகாட்டுதலை குர்ஆன் பேசுகிறது. இது பரஸ்பர மரியாதை. புரிதல் மற்றும் ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நீடித்த குடும்ப பிணைப்புகளுக்கு ஒரு அடித்தளத்தை அல்குர்ஆன் உருவாக்குகிறது.

துணைவர்களுக்கிடையேயான அன்பு:

அல்குர்ஆன், கணவன் மனைவிக்கிடையிலான அன்பு பற்றி கூறுகையில் அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் படைக்கப்பட்டுள்ளீர்கள் என்கிறது. (அல்குர்ஆன் 2:187) இந்த வசனம் வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையேயான நெருக்கமான மற்றும் பாதுகாப்பு உறவைக் குறிக்கிறது.

மனிதகுலத்தின் மீதான அன்பு:

இனம் மதம் மற்றும் சமூக அந்தஸ்து போன்ற தடைகளைத் தாண்டி குர்ஆன் மனிதகுலத்தின் மீதான அன்பை வலியுருத்துகிறது உண்மையான அன்பு தனிப்பட்ட வட்டங்களுக்கு அப்பால் நீண்டு, உலகளாவிய அன்பு மற்றும் ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கிறது என்று குர்ஆன் நமக்கு கற்பிக்கிறது.

இயற்கையின் மீதான அன்பு:

இயற்கை உலகத்தை, அல்லாஹ்வின் படைப்பின் வெளிப்பாடாகக் கருதி, அதைப் பாராட்டவும் நேசிக்கவும் குர்ஆன் விசுவாசிகளை ஊக்குவிக்கிறது. இந்த சுற்றுச்சூழல் கண்ணோட்டம் சுற்றுச்சூழலுக்கான பொறுப்புணர்வை வளர்க்கிறது மற்றும் அனைத்து உயிரினங்களோடும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வலுப்படுத்துகிறது.

Written By

Fathima Rifka Issadeen
Faculty of Arts (R), 3rd Year
University of Colombo


 

Friday, April 11, 2025

பல்கலைக்கழகம் நமது கல்விக்கும் மார்க்கத்திற்கும் இடையிலான பாலமாக இருக்க வேண்டும்

இஸ்லாம்: வெறுமனே ஒரு மதம் மட்டுமல்ல, பூரண வாழ்க்கை முறையாகும் 

இஸ்லாம் என்பது வெறும் மதமாக இல்லாமல், ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். எந்த சூழ்நிலையிலும் அதன் கட்டாயக் கடமைகளை விட்டுக் கொடுப்பதும், அலட்சியப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதை நாம் அனைவரும் அறிந்திருப்பினும், பல்கலைக்கழக வாழ்க்கையில் நாம் அதன் கடமைகளை புறக்கணிக்கின்றோம்.

பல்கலைக்கழகத்தில் மார்க்கக் கடமைகளை புறக்கணிப்பது

பல்கலைக்கழக வாழ்க்கை என்பது நாம் குடும்பத்திலிருந்து, பழக்கப்பட்ட சமூகத்திலிருந்து விலகி, புதிய இடங்களில், புதிய நண்பர்களுடன் வாழும் ஒரு காலக்கட்டமாகும். இந்த சூழலில், பல மாணவர்கள் தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை புறக்கணிக்கின்றனர்.

சில மாணவர்கள், "நாங்கள் வீட்டில் இருக்கும்போது பெற்றோர் நோன்பு நோற்க சொல்ல மாட்டார்கள், தொழுகைக்கு வற்புறுத்த மாட்டார்கள். நாங்கள் செல்ல பிள்ளைகள்" எனக் கூறுகின்றனர். "இங்கு வந்து தான் இப்படி கஷ்டப்படுகின்றோம்" எனச் சொல்லுகின்றனர். இது எமது சமுதாயத்திற்கான எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் விஷயமாகும்.

மாணவர்களின் அலட்சியம் மற்றும் அதன் விளைவுகள்

பல மாணவர்கள் விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு நேரமாகி சென்று, தொழுகைக்கு அவசியம் கொடுக்காமல் வாழ்கின்றனர்.

காலை நேரத்தில் சுப்ஹ் தொழுகை செய்யாமல், நேரடியாக வகுப்புகளுக்கு செல்கின்றனர்.

மாலை நேரத்தில் விடுதிக்கு திரும்பி வீண் பேச்சுக்களில் நேரத்தை வீணடிக்கின்றனர்.

நோன்பு காலங்களில், சஹர் உணவுக்காக மட்டும் எழுந்து, அதனை சாப்பிட்டு விட்டு பிறகு தொழுகையை புறக்கணிக்கின்றனர்.

இப்தார் உணவுக்காக உணவு கிடைக்கக்கூடிய பல பள்ளிவாசல்களை தேடுகின்றனர். ஆனால், உணவு சாப்பிட்ட பிறகு மஃக்ரிப் தொழுகையை தவிர்த்துவிடுகின்றனர்.

ரமளான் காலங்களில் மட்டும் கிடைக்கும் வாய்ப்பான தராவீஹ் தொழுகையை புறக்கணிக்கின்றனர். அது பரவாயில்லை கட்டாய கடமை இல்லை ஆனால் ஐவேளை தொழுகை கூட இல்லாமல் இருப்பது கவலைக்குரியது.

இவர்களே நாளை பட்டதாரிகளாகி, ஆசிரியர்களாகவும், அதிகாரிகளாகவும் சமூகத்திற்கு திரும்பும்போது, நமது சமுதாயத்தின் நிலை என்ன ஆகும்?

பல்கலைக்கழகம் – கல்விக்கும் மார்க்கத்திற்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும்

பல்கலைக்கழகம் என்பது மார்க்கத்திலிருந்து விலகி நிற்கும் இடமாக இருக்கக்கூடாது. மாறாக, கல்வியும் மார்க்கமும் இணைந்து வளர வேண்டிய இடமாக இருக்க வேண்டும். நமது அடையாளம், நமது கலாச்சாரம், நமது மதம் – இவை அனைத்தும் நாம் சுயமாக பாதுகாக்க வேண்டியவை.

பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு ஓய்வு நேரங்களை வழங்குகின்றன. அந்த நேரங்களை சரியாக பயன்படுத்த வேண்டும். படிப்புக்காகவும் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றவும் பயன்படுத்த வேண்டும்.

சாப்பாட்டிற்காக சிற்றுண்டிச் சாலைக்கு ஓடத் தெரிந்த நாம், தொழுகைக்காக ஓடத் தெரியாதா?

சாப்பாடு, அரட்டை ஆகியவற்றிற்காக நேரம் செலவழிக்கிறோம், ஆனால் தொழுகைக்காக ஒரு சில நிமிடங்களைக் கூட ஒதுக்க மறுக்கிறோம். உணவு அவசியம் என்றாலும், தொழுகை அதன் நேரத்தில் முக்கியத்துவம் பெற வேண்டாமா?

மறுமையை மறந்து வாழ்வது தவறு

பல மாணவர்கள் தொழுகையை புறக்கணிக்கின்றனர், ஆனால் உடை அலங்காரங்களில் மற்றும் வீண் பேச்சுக்களில் கவனம் செலுத்துகின்றனர்.

ஆண்கள் பல்கலைக்கழக விழாக்களிலும் வேடிக்கைகளிலும் வீண் பேச்சுக்களிலும் காலத்தை செலவிடுகின்றனர்.

பெண்கள் உடை அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர், தொழுகைக்காக உளூ செய்ய வேண்டும் முழு செய்தால் அவர்களது ஆடை அலங்காரங்கள் கலைந்து விடும் என தொழுகை ஐவேளை தொழுகையை அலட்சியம் செய்கின்றனர்.

இந்த அலட்சியத்திற்கான விளைவுகள் நம் மறுமையை மட்டுமல்ல, நம் சமூகத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும்.

மாற்றம் எங்கே இருந்து ஆரம்பிக்க வேண்டும்?

நாம் இன்று எழுந்து மாற வேண்டும்!

தொழுகையை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.

நோன்பை முறையாக நோற்க வேண்டும்.

குர்ஆன் வாசிப்பை அதிகரிக்க வேண்டும்.

பிற மத சகோதரர்களுடன் இணைந்து வாழ, அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களுடன் கரைந்து போகக்கூடாது.

பல்கலைக்கழக வாழ்க்கை என்பது தங்கள் மதத்தையும், கலாச்சாரத்தையும் விட்டுவிட்டு உலக வாழ்க்கையை மட்டும் அனுபவிக்க வேண்டிய இடமாக இருக்கக்கூடாது. மாறாக, கல்வியும் மார்க்கமும் ஒன்றாக வளர்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்க வேண்டும்.

நாம் அனைவரும் நமது கடமைகளை உணர வேண்டும். நம்மால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும். இன்று நாம் மாற்றமடைவோம், நாளைய தலைமுறைக்கு ஒரு நல்ல வழிகாட்டலாக இருப்போம்!


Written By

Mohammed Umair
Faculty of Arts (R)
University of Colombo



Wednesday, April 9, 2025

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் இயற்கை மற்றும் சூழல் பாதுகாப்பு

சூழல் பாதுகாப்பு என்பது இஸ்லாமிய வாழ்வியல் முறையின் முக்கிய பங்களிப்புக்களில் ஒன்றாகும். குர்ஆனும் ஹதீஸ்களும் இயற்கையையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த நெறிமுறைகள் மனிதனுக்கு தேவையான ஒழுக்கத்தை மட்டும் அல்லாமல் பூமியின் மீது அவன் பொறுப்பையும் தெளிவுப்படுத்துகின்றன. குர்ஆன் மனிதனை "கிலாஃபா"( பூமியின் பாதுகாவலர்) என வரையறுக்கிறது.  இஸ்லாம் பூமியின் வளங்களை பாதுகாப்பது மனிதனின் ஒரு கடமை என அறிவுறுத்துகின்றது. எனவே எமக்காக படைக்கப்பட்டுள்ள இந்த இயற்கையை பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும். ஒவ்வொரு முறையும் நாம் அந்த வானத்தையும் இந்த பூமியையும் மரங்களையும் இன்னும் பல இயற்கையையும் பார்க்கும் போது ஏன் அல்லாஹ்வின் அற்புதத்தை நினைத்துப் பார்ப்பதில்லை !

இது அனைத்தும் தானே உருவானது அல்ல, படைப்பாளனாகிய அல்லாஹ்வினால் உருவாக்கப்பட்டது. அவ்வாரிருக்கும் போது உருவாக்கிய அவனே இதன் முக்கியத்துவத்தையும் இதனை பாதுகாப்பதில் மனிதனுக்கு இருக்கும் பொறுப்பையும் வலியுறுத்தி கூறுகிறான். சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் பேசியுள்ளான்.

குர்ஆன் மற்றும் சூழல் பாதுகாப்பு

இறை வாக்கானது,

“நிச்சயமாக நாம் நீர்நிலைகளையும், மலைகளையும், மழையையும் மனிதனுக்காக அன்றி வீணுக்காக படைக்கவில்லை” என பல வசனங்களில் பேசுகின்றது. 

இது மனிதர்கள் இயற்கையின் பொறுப்பாளர்களாகச் செயல்பட  வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேலும், நீர் மாசுபாட்டைத் தடுக்கவும், காற்றை சுத்தப்படுத்தவும், பூமியின் வளங்களைச் சுரண்டாமல் பாதுகாப்பதற்கும் பல கட்டளைகளை இஸ்லாமிய நாகரிகம் வழங்கியுள்ளது. "அதிகளவான வீண் விரயத்தை குர்ஆன்  பல இடங்களில் கண்டித்துள்ளது."

இது  நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை மதிக்கச் செய்யும்.வாழும் சூழலின் மீதான பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் சுமத்தப்பட்டுள்ளது

பூமியில் அழிவை ஏற்படுத்தாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் அழிவை ஏற்படுத்துவோரை விரும்புவதில்லை" (சூரா அல் கசஸ்)

என்ற இறைவாக்கின் அடிப்படையில் சூழல் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

ஹதீஸ் மற்றும் சூழல் பாதுகாப்பு.

அல்லாஹ்வின் தூதரின் வாழ்க்கை வழிமுறைகளிலும் இயற்கையை பாதுகாப்பதற்கான பல முன்மாதிரிகள் காணப்படுகின்றன. 

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்,

"ஒரு முஸ்லிம் மரம் நட்டால் அல்லது பயிர் உழுதால் அதன் பழங்களில் உயிரினங்கள் உண்ணும் ஒவ்வொரு முறையும் அவனுக்கு ஒரு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்" (அல் புகாரி ,முஸ்லிம்)

இந்த ஹதீஸ் மரம் நடுவது மற்றும் இயற்கையை வளப்படுத்துவது ஒரு புண்ணிய வேலை என உணர்த்துகிறது.

மேலும்  ஒரு முறை இறைத்தூதர் இவ்வாறு கூறினார்.

 "நீர்  ஓர் ஆற்றின் அருகே இருந்தாலும் கூட நீரை வீணாக்காதீர்கள்" (இப்னு மாஜா)

இந்த ஹதீஸ் நீரின் ஒவ்வொரு துளியையும் மதிப்பது எவ்வளவு முக்கியம் என சுட்டிக்காட்டுகின்றது.

இது மட்டுமின்றி அல்லாஹ்வின் படைப்புக்களான உயிரினங்களும் கூட இயற்கைக்குள்ளேயே உள்வாங்கப்படுகின்றன. அந்த வகையில் உயிரினங்களை பாதுகாப்பதும் எமது கடமையாகும். பூனைக்கு உணவளிக்காததால் நரகத்திற்கு சென்ற பெண்ணின் கதையும், நாய்க்கு நீர் புகட்டியதால் சுவனத்திற்கு சென்ற பெண்ணின் கதையும் நாம் அறிந்த விடயமே..!

இவை யாவும் இஸ்லாத்தில் இயற்கைக்கான பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறித்து நிற்கின்றது.எனவே இயற்கையை அழிக்காமல் பாதுகாத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி, மரங்களை வளர்த்து சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தால் அது அல்லாஹ்வின் கிருபையை பெரும் வழியாகும். 

இஸ்லாத்தின் இந்தக் கருத்துக்கள், இன்று  நவீன சிந்தனையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன.. ஏனெனில் சூழல் பாதுகாப்பிற்காக இஸ்லாம் காட்டியுள்ள வழிமுறைகள் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உதவக்கூடியவையாக காணப்படுகின்றன. 

இறைவன்  படைத்த இந்த அழகிய உலகத்தைப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம்!


Written By

B F Zainab
Faculty of Arts (R)
University of Colombo


Saturday, April 5, 2025

நோன்பு தரும் மாண்பு

ரமலான் மாதம் புனிதத்துவம் மிக்க மாதமாக திகழ்வது போல அம்மாதத்தில் நோற்கப்படுகின்ற நோன்பும் சிறப்புக்குரிய இபாதவாக அமைதிருகின்றது.

ஸவ்ம் எனும் பதம் 'ஸ்வாம்' எனும் அறபு பதத்திலிருந்து தோன்றியதாகும். தவிர்ந்து கொள்ளுதல் எனும் மொழி கருத்தை இது தருகிறது உணவு, பானம், பாவம் என்பவற்றைத் தவிர்த்தல் என்ற கருத்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தின் பார்வையில் இதற்கு பின்வரும் கருத்து கொடுக்கப்படுகின்றது. 'நோன்பு கடமையாகும் ஒரு முஸ்லிம் தான் இறை திருப்தியை நாடி நோன்பிருக்கின்றேன் எனும் எண்ணத்துடன் பஜர் உதயமாகியது தொட்டு சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் கருமங்களைத் தவிர்ந்து வாழுதல்.

நோன்பு நோற்றவர் ஆன்மீக ரீதியிலும் லௌகீக ரீதிலும் அதிக பயன்படுகளை பெற்றுக் கொள்வார். அதாவது அவருக்கு மேலும் மறுமையிலும் பல்வேறு வகையான பயன்கள் நோன்பினை நோற்பதன் மூலம் அவர் பெற்றுக் கொள்கின்றார். அவற்றில் ஆன்மீக ரீதியாகவும், இவ் உலகில் பெற்றுக்கொள்ள கூடிய பயன்கள் லௌகீகரீதியாகவும் காணப்படுகின்றன. நாம் அவற்றை நோக்கலாம்.

ஆன்மீகப் பயன்பாடுகள்

1.நோன்பு ஈமான் இறையச்சத்தை ஏற்படுத்துகின்றது.

ஈமான் கொண்டவர்களுக்கு நோன்பு ஒரு கேடயமாக அமைந்துள்ளது. இறையச்சத்தை அதாவது உளத்தூய்மையை வளர்த்து விடுகின்றது. இறையச்சம் நோன்பின் பிரதான குறிக்கோளாக அமைந்துள்ளது.

"விசுவாசிகளே நீங்கள் இறையச்சம் பெறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது வித்தியாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது." (அல்குர்ஆன்)

2. சுவர்க்கம் நுழையும் பாக்கியம் பெறல்.

அதாவது இறைவணக்கங்களின் ஈடுபாடு அதிகரிக்கும். நன்மைகள் புரிவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றன. 'ஒவ்வொன்றுக்கும் ஒரு வாயில் உண்டு. வணக்கத்தின் வாயில் நோன்பாகும்" (ஹதீஸ்) நோன்பு நோற்பதன் மூலம் ரமலானில் சுவர்க்கவாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகம் மூடப்படுகின்றன. சைத்தான் விலங்கிடப்படுகின்றான்.

நோன்பு நோற்பதன் மூலம் நோன்பாளிகளுக்கு என்று தயாரிக்கப்பட்ட ரய்யான் எனும் வாயிலின் ஊடாக சொர்க்கம் நுழையும் பாக்கியத்தை பெறலாம்.

3. பாவங்களை மன்னிப்பதற்குரிய சந்தர்ப்பமாக அமைதல்

பொதுவாகவே ரமலான் நாட்களில் பாவமன்னிப்பு அதிகம் இடம் பெறும் "யார் ஈமானுடனும் உள்ளச்சத்துடனும் நோன்பு நோற்கிறாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். (ஹதீஸ்)

4. உடல் மட்டுமல்லாது உள்ளமும் நோன்பிருக்கிறது.

உடல் உறுப்புகளான வாய், கண், காது, கை, கால் அனைத்தும் நோன்பிருக்கையில் ஆன்மீக உணர்வுகள் வளர்ச்சி அடைகின்றன. அதாவது கோபம், பொய், புறம்,இழி செயல்கள் யாவும் தவிர்க்கப்படுகின்றன

"நோன்பு பிடிப்பவர் பலர் பசியுடனும் தாகத்துடனும் இருப்பவர்களாவே நின்று விடுகின்றனர். விலக்கப்பட்டதைச் செய்து நோன்பு முடித்துக் கொள்கின்றனர். ஆகுமான உணவுஉண்பதை நிறுத்தி மனித உணைப் புசிக்கின்றனர். புறம் பேசுவது மனித உணைப் புசிப்பத்தாக்கும் (ஹதீஸ்)

5. அல்லாஹ்வுக்கு அடியார்களுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்தும்.

நோன்பு இறைவனது திருப் பொருத்தத்தை நாடி மட்டுமே புரியப்படுகின்ற வணக்கமாகும் முகஸ்துதி, பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் இதில் காணப்படுவதில்லை. ஆகவே அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் (ஹதீஸ் குத்ஸி) 

6. நோன்பு நோற்ற மனிதனுக்காக மறுமையில் நோன்பு மன்றாடும்.

அவ்லாஹ்வுக்காக யார் ஒருநாள் நோன்பு நோற்கிறாரோ அவரது முகத்தை அல்லாஹ் 70 வருடங்கள் தூரமாக்கி விடுன்றான்.

"நோன்பும்.அல்குர்ஆனும் மறுமை நாளில் மன்றாடும்."(ஹதீஸ்)

7. நன்மைகளை அதிகரித்துக் கொள்ள வாய்ப்புகள் காணப்படுதல்.

பாவங்களில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக நோன்பு காணப்படுகின்றது. வைவதுல் கதிரின் மகத்துவம் நரகவிடுதலை, ஸதகா, பொறுமை என்பவற்றில் மலக்குகளுக்கு நெருங்கிய தரத்தை நோன்பாளி அடைகின்றமை.

"யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ,தாசித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத்தேவையில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி)நூல்: புகாரி 1903.(ஹதீஸ்)

லைலத்துல் கதர் எனும் இரவை எதிர்பார்த்துசெய்யும் போது அதிக அமல்களின் நன்மைகளை ஈட்டிக் கொள்ள முடிகிறது.

லௌகீகப் பயன்கள் / உலகியல் பயன்கள்

1. அன்பு சகோதரத்துவ உணர்வு வளர்தல்.

சமூகத்தை புரிந்து கொள்ளவும், பராமரிக்கவும் பழக்கப்பட்டு வருகின்றது.ஏழைகளோடு அன்பும், கருணையுடனும் இணைந்திருக்க செய்கின்றது சகோதரத்துவம், சமூக உணர்வு, ஒற்றுமை, மனிதநேயம், சமத்துவ பண்பு போன்றவற்றை வளர்க்கின்றது.

"நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள் வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்" (ஹதீஸ்)

2. தனிதமனித சமூக பொருளாதார மேம்பாடு ஏற்படும்.

வருமானத்துக்கேற்ப செலவு செய்யப் பழக்கப்படுத்திக் கொள்கையில் தனிமனித, குடும்ப பொருளாதார மேம்பாடு உருவாகின்றது. தனிமனித சேமிப்பு உலக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமைகின்றது. வீண்விரயம் தவிர்த்து சிக்கனமான வாழ வழிகாட்டுகின்றது.

3. குர்ஆன் கூறும் சமூக அரசியல் வாழ்வு மலர்ந்து காணப்படும்.

ஷஹ்ருல் குர்ஆன் என்பதனால் குர்ஆனுடன் தொடர்பு அதிகரிக்கின்றது. இது மாபெரும் சமூக மாற்றத்திற்கு காரணமாகின்றது அல்குர்ஆனை ஓதுவதால் மன அமைதி கிடைப்பதோடு ஞாபகசக்தி அதிகரிக்கிறது.

4. ஆரோக்கிய வாழ்வு கிடைக்கின்றது.

ஒரு மாத கால நோன்பு உடலின் பெளதீக நிலையை சீர் பெற காரணமாகின்றது.

"நோன்பு நோற்பபீர்களாக ஆரோக்கியவான்களாக மாறுவீர்கள்" (ஹதீஸ்)

உடலின் எடை குறைவடையும், பலவித நிவாரணமாக நோன்பு விளங்குகின்றது.

நோன்பு நோற்பதனால் உடலியல் எனும் physiological ரீதியான நன்மைகளான இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுதல், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் குறைதல் மற்றும் இரத்த அழுத்தம் குறைதல் ஆகியவை ஏற்படுகிறது. 1994 ஆம் ஆண்டு மொரோக்கோ தலைநகரில் நடந்த "ஆரோக்கியமும் ரமலானும்' என்ற தலைப்பில் முதல் சர்வதேச கூட்டமைப்பு அமர்வில் 50 ஆராய்ச்சி படைப்புகளை

சமர்ப்பித்தனர். எல்லா ஆய்வுகளும் ரமலான் நோன்பால் பல மருத்துவ நோய்களின் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இருந்தது.

5. கூட்டுக் கடமையாக காணப்படுகின்றது.

சர்வதேச முஸ்லிம் சமூகமும் நோன்பு இருக்கிறது. நோன்பின் சகல பயன்பாடுகளையும் சகலரும் பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகின்றது.

7. சுயக் கட்டுப்பாட்டை நோன்பு ஏற்படுத்துகின்றது.

அதாவது ஒவ்வொரு மனிதனும் தன்னை சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக கொள்வதற்கு நோன்பு உதவுகின்றது. கட்டுப்பாடான வாழ்க்கை பயிற்சியை தருகின்றது. தான் எவ்வாறு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதனை நோன்பு உணர்த்துகின்றது. அத்தோடு குற்றச் செயல்கள் குறைவடைகின்றது தன்னை கட்டுப்படுத்தி குற்ற செயல்களை தவிர்ந்து கொள்ள உதவிகின்றது.

8. பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வளர்க்கின்றது.

நோன்பிருப்பதன் மூலம் தான் உண்ணாமலும் பருகாமலும் அல்லாஹ் அங்கீகரிக்கப்பட்ட விடயங்களை மேற்கொள்ளாமலும் இருப்பதன் மூலம் பொறுமையை உண்டாக்குகின்றது.அத்தோடு குற்றச் செயல்களில் இருந்து தன்னை பாதுகாத்து தனக்கு பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கின்றது. 'எல்லா பொருட்களுக்கும் ஸகாத் உண்டு. உடலின் ஸகாத் உண்டு உடலின் ஸகாத் நோன்பாகும். நோன்பு பொறுமையின் அரைவாசியாகும். (ஹதீஸ்)

இது மட்டுமல்ல இன்னும் பல நன்மைகள் காணப்படுக்கின்றன. இவ் ரமலான் மாதத்தில் உச்ச நன்மைகளை பெறக்கூடிய வகையில் அல்லாஹ்வுக்கு ஈடேற்றமானதாகவும் ஈருலகத்துக்கும் நன்மை பெறக்கூடியதாகவும் எமது வாழ்க்கையை அமைக்க வேண்டும்.

Written By

M M F Sasna
Faculty of Arts (R)
University of Colombo




Thursday, April 3, 2025

கவியால் பாடு கழகத்தை

கலை தந்த கவி

இன்று கலையின் புகழ் சொல்ல 

கவிதை எனும் மடலேந்தி

களிப்புடன் சொல்கிறது இங்கே,


நிறைவான ஆசையினால்

நிதம் பல காத தூரம் தாண்டி

பல் கலை கற்க வந்த

பக்குவமானர் நாம்..


மேல் படிப்பு மட்டுமல்லாது, 

மேலான குணங்களையும்

மேதைகளின் மகிமைகளையும்

மெய்சாற்றிடும் இடமிது!!


"பங்கேற்கும் நிகழ்வுதனில்

பரிசிலினையும் பெற

பயிற்சி கொடுக்கும் இடம் இது தானோ" என வியக்க வைக்கிறது எம்மை...


தேன் குடிக்கும் வண்டுகளை

பூவின் மணம் பாராது

பாரபட்சம் ஏதுமின்றி

பாரினிவே உள்ள அனைத்து மலர்களிலும் உண்ணும் விந்தை போல் -

பல பாகங்களிலும் சிதறிய எம்மை ஒன்று சேர்த்த இடமிது..


கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன்

முறையான ஓர் வாழ்வை வாழ

பயிற்றுவிக்கும் கழகம் இது..


ஆண்டாண்டு தோறும் அழகாய் பூத்து

ஜொலிக்கும் மரங்களாய்

ஆண்டுக்கொருமுறை புதிய பட்டதாரிகளை கொண்டு ஜொலிக்கிறது//


நவீன காலத்திற்கு ஏற்ற கல்வியை நபிகளாரின் முறை தவறாது நன்றாக ஊட்டி நல்வழிப்படுத்தும்

எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வழிப்படுத்தும் சாலையோ!!


அமைதியான வாழ்க்கைக்கு ஆரம்பபுள்ளியோ, இக்கழகம்!!

அண்ணலார் வழிநடத்திய மதீனத்து சமூதாயத்தை போன்று இன மத மொழி பாராது அனைவரும் சமவுரிமை கொடுத்து பல்கலாச்சார சமூகத்தை பறைசாற்றும் கழகம் இது..


முதலாண்டில் கலங்கி நின்றவருக்கு களம் அமைந்து கொடுத்து

முடிவாண்டில் அவரின் முன்னேற்றத்தை பாராட்டி கதை சொல்லியது..


தாய்மடி தந்த ஆறுதலை

இறையுணர்வு கொண்ட நேச தோழர்களின் வழியே தந்து

வளரவிட்டு வாகை தந்து வாழ்ந்து பாடி வழிகாட்டிய சாலையே இப்பல்கலைக்கழகம்!!...


A.F.Afra

1st Year

Faculty of Arts 

University of Colombo

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...