ஸவ்ம் எனும் பதம் 'ஸ்வாம்' எனும் அறபு பதத்திலிருந்து தோன்றியதாகும். தவிர்ந்து கொள்ளுதல் எனும் மொழி கருத்தை இது தருகிறது உணவு, பானம், பாவம் என்பவற்றைத் தவிர்த்தல் என்ற கருத்துக் கொள்ளலாம்.
இஸ்லாத்தின் பார்வையில் இதற்கு பின்வரும் கருத்து கொடுக்கப்படுகின்றது. 'நோன்பு கடமையாகும் ஒரு முஸ்லிம் தான் இறை திருப்தியை நாடி நோன்பிருக்கின்றேன் எனும் எண்ணத்துடன் பஜர் உதயமாகியது தொட்டு சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் கருமங்களைத் தவிர்ந்து வாழுதல்.
நோன்பு நோற்றவர் ஆன்மீக ரீதியிலும் லௌகீக ரீதிலும் அதிக பயன்படுகளை பெற்றுக் கொள்வார். அதாவது அவருக்கு மேலும் மறுமையிலும் பல்வேறு வகையான பயன்கள் நோன்பினை நோற்பதன் மூலம் அவர் பெற்றுக் கொள்கின்றார். அவற்றில் ஆன்மீக ரீதியாகவும், இவ் உலகில் பெற்றுக்கொள்ள கூடிய பயன்கள் லௌகீகரீதியாகவும் காணப்படுகின்றன. நாம் அவற்றை நோக்கலாம்.
ஆன்மீகப் பயன்பாடுகள்
1.நோன்பு ஈமான் இறையச்சத்தை ஏற்படுத்துகின்றது.
ஈமான் கொண்டவர்களுக்கு நோன்பு ஒரு கேடயமாக அமைந்துள்ளது. இறையச்சத்தை அதாவது உளத்தூய்மையை வளர்த்து விடுகின்றது. இறையச்சம் நோன்பின் பிரதான குறிக்கோளாக அமைந்துள்ளது.
"விசுவாசிகளே நீங்கள் இறையச்சம் பெறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது வித்தியாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது." (அல்குர்ஆன்)
2. சுவர்க்கம் நுழையும் பாக்கியம் பெறல்.
அதாவது இறைவணக்கங்களின் ஈடுபாடு அதிகரிக்கும். நன்மைகள் புரிவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றன. 'ஒவ்வொன்றுக்கும் ஒரு வாயில் உண்டு. வணக்கத்தின் வாயில் நோன்பாகும்" (ஹதீஸ்) நோன்பு நோற்பதன் மூலம் ரமலானில் சுவர்க்கவாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகம் மூடப்படுகின்றன. சைத்தான் விலங்கிடப்படுகின்றான்.
நோன்பு நோற்பதன் மூலம் நோன்பாளிகளுக்கு என்று தயாரிக்கப்பட்ட ரய்யான் எனும் வாயிலின் ஊடாக சொர்க்கம் நுழையும் பாக்கியத்தை பெறலாம்.
3. பாவங்களை மன்னிப்பதற்குரிய சந்தர்ப்பமாக அமைதல்
பொதுவாகவே ரமலான் நாட்களில் பாவமன்னிப்பு அதிகம் இடம் பெறும் "யார் ஈமானுடனும் உள்ளச்சத்துடனும் நோன்பு நோற்கிறாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். (ஹதீஸ்)
4. உடல் மட்டுமல்லாது உள்ளமும் நோன்பிருக்கிறது.
உடல் உறுப்புகளான வாய், கண், காது, கை, கால் அனைத்தும் நோன்பிருக்கையில் ஆன்மீக உணர்வுகள் வளர்ச்சி அடைகின்றன. அதாவது கோபம், பொய், புறம்,இழி செயல்கள் யாவும் தவிர்க்கப்படுகின்றன
"நோன்பு பிடிப்பவர் பலர் பசியுடனும் தாகத்துடனும் இருப்பவர்களாவே நின்று விடுகின்றனர். விலக்கப்பட்டதைச் செய்து நோன்பு முடித்துக் கொள்கின்றனர். ஆகுமான உணவுஉண்பதை நிறுத்தி மனித உணைப் புசிக்கின்றனர். புறம் பேசுவது மனித உணைப் புசிப்பத்தாக்கும் (ஹதீஸ்)
5. அல்லாஹ்வுக்கு அடியார்களுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்தும்.
நோன்பு இறைவனது திருப் பொருத்தத்தை நாடி மட்டுமே புரியப்படுகின்ற வணக்கமாகும் முகஸ்துதி, பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் இதில் காணப்படுவதில்லை. ஆகவே அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் (ஹதீஸ் குத்ஸி)
6. நோன்பு நோற்ற மனிதனுக்காக மறுமையில் நோன்பு மன்றாடும்.
அவ்லாஹ்வுக்காக யார் ஒருநாள் நோன்பு நோற்கிறாரோ அவரது முகத்தை அல்லாஹ் 70 வருடங்கள் தூரமாக்கி விடுன்றான்.
"நோன்பும்.அல்குர்ஆனும் மறுமை நாளில் மன்றாடும்."(ஹதீஸ்)
7. நன்மைகளை அதிகரித்துக் கொள்ள வாய்ப்புகள் காணப்படுதல்.
பாவங்களில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக நோன்பு காணப்படுகின்றது. வைவதுல் கதிரின் மகத்துவம் நரகவிடுதலை, ஸதகா, பொறுமை என்பவற்றில் மலக்குகளுக்கு நெருங்கிய தரத்தை நோன்பாளி அடைகின்றமை.
"யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ,தாசித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத்தேவையில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி)நூல்: புகாரி 1903.(ஹதீஸ்)
லைலத்துல் கதர் எனும் இரவை எதிர்பார்த்துசெய்யும் போது அதிக அமல்களின் நன்மைகளை ஈட்டிக் கொள்ள முடிகிறது.
No comments:
Post a Comment